கான்பூர்:
மத்திய பாஜக அரசை, பின்னிருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்பது எதிர்க்கட்சி யினர் நீண்டகாலமாக வைக்கும் குற்றச்சாட்டாகும்.
இந்நிலையில், மோடி அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆலோசனை வழங்கும் என்று நேரடியாகவே அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.கான்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசும்போதுதான், இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகாரம் அதிகளவில் கிடைக்கும். ஆனால், அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. எப்போதாவது முடிவெடுப்பதற்கு அரசு தடுமாறும்போது, ஆர்எஸ்எஸ் தனது ஆலோசனையை அரசுக்கு அளிக்கும்” என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.மேலும், “ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், மற்றவர்களுக்கு எவ்வித உதவி புரிந்தாலும், தங்கள் பிடிவாதத்தை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது. மேலும், சமூக சமத்துவம், கல்வி அறிவூட்டல், மது மற்றும் போதைக்கு அடிமையாவதைத் தடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பகவத் போலி உபதேசம் செய்துள்ளார்.